![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnvfFPSNIL_L5Hml7e0GpEwhrVpAstMsGt0CVJzrJGvG4o7__AceUty_S7mp0Hg-T7m1oBEy_GohTTT92jh9ZmdaqEiYLuvNMagTIMt76d7EItMLoBrmVTKYzwDqNM_eEzdW_HU451aoZTNP1wl15CA0L0oJzN0i5dT5xqk7Sa881l7jCL349XWEsA/s16000/Sri-lanka-parliament.jpg)
நாடாளுமன்றத்தில் இன்று (23) மதிய நேர உணவுக்கு நாடாளுமன்ற ஊடகவியலாளர்கள் உணவகத்தில் உணவு பரிமாறிக் கொண்டிருக்கையில் ஊடகவியலாளர் ஒருவரின் உணவுத்தட்டில் இருந்து சுமார் ஒரு அடி நீளமான சனல் நூல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குறித்த ஊடகவியலாளர் உடனே உணவக பிரிவு பிரதானிக்கு அது தொடர்பில் முறைப்பாடு செய்து சனல் நூலை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
நெத்தலி மீனுடன் சனல் நூல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு சில ஊடகவியலாளர்கள் உணவு உட்கொள்வதை நிறுத்திக் கொண்டார்கள்.
இதேவேளை, நாடாளுமன்ற உணவத்தினால் நேற்று (23) விநியோகிக்கப்பட்ட மீன் விஷமானதில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கடும் சுகயீனமுற்று நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். நாடாளுமன்ற வைத்திய மத்திய நிலையத்தில் ஆரம்ப சிகிச்சை பெற்றுக்கொண்ட பின்னர் அவர்கள் அம்பியூலன்ஸ் ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணிப்பின் பேரில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்