நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட பகல் உணவில் ஒரு அடி நீளமான சனல் நூல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட பகல் உணவில் ஒரு அடி நீளமான சனல் நூல்!


நாடாளுமன்றத்தில் இன்று (23) மதிய நேர உணவுக்கு நாடாளுமன்ற ஊடகவியலாளர்கள் உணவகத்தில் உணவு பரிமாறிக் கொண்டிருக்கையில் ஊடகவியலாளர் ஒருவரின் உணவுத்தட்டில் இருந்து சுமார் ஒரு அடி நீளமான சனல் நூல் கண்டுபிடிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து குறித்த ஊடகவியலாளர் உடனே உணவக பிரிவு பிரதானிக்கு அது தொடர்பில் முறைப்பாடு செய்து சனல் நூலை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.


நெத்தலி மீனுடன் சனல் நூல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு சில ஊடகவியலாளர்கள் உணவு உட்கொள்வதை நிறுத்திக் கொண்டார்கள்.


இதேவேளை, நாடாளுமன்ற உணவத்தினால் நேற்று (23) விநியோகிக்கப்பட்ட மீன் விஷமானதில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கடும் சுகயீனமுற்று நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். நாடாளுமன்ற வைத்திய மத்திய நிலையத்தில் ஆரம்ப சிகிச்சை பெற்றுக்கொண்ட பின்னர் அவர்கள் அம்பியூலன்ஸ் ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணிப்பின் பேரில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.