advertise here on top
Join yazhnews Whatsapp Community

பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!

முன்னாள் நிதியமைச்ச பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் 2023 ஜனவரி 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் வெளிநாடு சென்றுவர நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வைத்திய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளல் உட்பட தனிப்பட்ட காரணங்களால், அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல எதிர்பார்த்துள்ளமையால், அதற்காக அனுமதி வழங்குமாறு, பசில் ராஜபக்ஷ சார்பில் உயர்நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

இதனைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐவர் கொண்ட நீதியரசர்கள் ஆயம், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு, வெளிநாடு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராக, விசாரணை நடத்த அரசாங்கத்துக்கு உத்தரவிடுமாறுகோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.