தந்தையின் வானில் சிக்குண்டு பரிதாப பலியான 2 வயது குழந்தை!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தந்தையின் வானில் சிக்குண்டு பரிதாப பலியான 2 வயது குழந்தை!!!


திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தையின் வானில் சிக்குண்ட 2 வயது குழந்தை பலியான சம்பவம் ஒன்று, இன்று (07) இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தந்தை, திருகோணமலைக்கு திருமண வைபவத்துக்கு செல்ல உள்ள நிலையில், வீட்டில் வைத்து வானை பின்னால் எடுத்த போது, அதற்குள் சிக்குண்டு தனது மகள் ஸ்தலத்தில் பலியானதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.


இவ்வாறு உயிரிழந்த குழந்தை, தம்பலகாமம் நாயன்மார் திடலை சேர்ந்த ஆர்.நசிட்றா (வயது 02) என பொலிஸார் தெரிவித்தனர்.


வான் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், குழந்தையின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.