நோயாளர்களிடம் 10 மில்லியனுக்கும் அதிகமாக பணமோசடி செய்த 25 வயது நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நோயாளர்களிடம் 10 மில்லியனுக்கும் அதிகமாக பணமோசடி செய்த 25 வயது நபர் கைது!


புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பலரிடம் இருந்து 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 25 வயதான மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நிதி மோசடி தொடர்பில் பொலிஸில் பதிவு செய்யப்பட்ட ஏழு முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த இளைஞன் நோயாளிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் நோய் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெற்று அவர்களின் சிகிச்சைக்காக 100,000 ரூபாவை கணக்குகளில் வைப்பதாக உறுதியளித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


அவர் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கான எஸ்எம்எஸ் ஓடிபியைப் பெற்ற பிறகு நோயாளிகளின் வங்கிக் கணக்கில் இருந்து தனது தனிப்பட்ட கணக்கிற்கு பணத்தை மாற்றினார்.


சிங்கப்பூரில் மென்பொருள் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த சந்தேகநபர் நிதி மோசடி மூலம் 10 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு, வேலவீதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட இவர் ஏறாவூரில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


இவ்வாறான நிதி மோசடிக்கு உள்ளான புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.