இலங்கை அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி!!!


ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கான முதல் போட்டியில் இலங்கை அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.


சார்ஜாவில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.


இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.


அணிசார்பில் அதிகபடியாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 84 ஓட்டங்களையும், இப்ராஹிம் சத்ரான் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.


பந்துவீச்சில் இலங்கை அணியின் டிலான் மதுஷங்க 37 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.


இந்நிலையில், 176 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.


அணிசார்பில் அதிகபடியாக குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.


பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் முஜீப் உர் ரஹ்மான் 30 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.