இன்று முதல் QR முறையில் மாத்திரமே எரிபொருள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று முதல் QR முறையில் மாத்திரமே எரிபொருள்!


இன்று (01) முதல் எரிபொருள் விநியோகம் QR எரிபொருள் கடவு முறையின் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

வாகனப் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையிலான இலக்கத் தகடு முறை, டோக்கன் முறை மற்றும் இதுவரை நடைமுறையில் உள்ள ஏனைய அமைப்புகள் இன்று முதல் செல்லுபடியாகாது என அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் எந்தவொரு வாகனமும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR குறியீட்டைக் காட்டி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும், மேலும் வாகனத்தின் QR குறியீடு தொடர்பான மீதமுள்ள வாராந்திர எரிபொருள் கோட்டா மட்டுமே கிடைக்கும்.

இதற்கிடையில், கோவிட் மீண்டும் பரவி வருவதால், பெட்ரோல் நிலையங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.