முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பதிவு!


ரோயல் பார்க் கொலைக் குற்றவாளி ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதியிடம் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 


பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


2005 ஆம் ஆண்டு இராஜகிரியவில் உள்ள ரோயல் பார்க் காண்டோமினிய வளாகத்தில் இவோன் ஜோன்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


2012 இல் ஆரம்பத்தில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் கொலைக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். 


ராயல் பார்க் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.


பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கினார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.