கட்சியின் செயற்குழுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுவிலும் அவர் அங்கம் வகிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான முயற்சிக்கு ரஞ்சன் ரணநாயக்க தலைமை தாங்குவார் என சஜித் பிரேமதாச இன்று டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கியுள்ளார், இதனால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இன்னும் 7 ஆண்டுகளுக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)