அரசாங்கத்தில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

அரசாங்கத்தில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்!


அரசாங்கத்தில் இணைவதாக அண்மைக்காலமாக பரபரப்பாக பேசப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் பெயர் போன ஒருவர் தற்போது அரசாங்கத்தில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


நிதியமைச்சர் பதவி கிடைக்காததால் இவ்வாறு நடந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.


அவருக்கு கொள்கை திட்டமிடல் துறை அமைச்சர் பதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, அடுத்த வாரம் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அரசாங்கத்தின் அமைச்சரவையின் ஏனைய அமைச்சர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது இவ்விடயம் விமர்சிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு தாமதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.


இதேவேளை, அமைச்சர்களை நியமிக்கும் போது முதலில் அரச அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.