ரோஹித்த ராஜபக்சவின் ஹோட்டலுக்கு தீ வைத்த சந்தேக நபர்கள் கைது!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

ரோஹித்த ராஜபக்சவின் ஹோட்டலுக்கு தீ வைத்த சந்தேக நபர்கள் கைது!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவிற்கு சொந்தமான கொலன்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு தீ வைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி கொங்கலகந்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு சந்தேகநபர்கள் சொத்துக்களை திருடி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கொலன்னாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் திங்கட்கிழமை (22) மற்றும் செவ்வாய்க்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 25 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட கொலொன்னாவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொலன்னாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.