பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல்!


க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) வெளியாகியுள்ள நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான 3 வாரங்களுக்கு ஒன்லைன் மூலம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து மாணவர்களுக்கு உரியவாறான தெளிவுபடுத்தலை வழங்கும் நோக்கில் இன்று (30) கொழும்பில் அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இவ்வாறு தெரிவித்தார்.

கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) வெளியாகியிருக்கும் நிலையில், மாணவர்கள் அடுத்த திங்கட்கிழமை முதல் இணையவழியில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கமுடியும். அதன்படி மாணவர்கள் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரையான 3 வாரங்களுக்குப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அவர் கூறினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.