அலரி மாளிகையினுள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேக நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அலரி மாளிகையினுள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேக நபர் கைது!

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகைக்குள் நுழைந்து அதன் சொத்துக்களை அபகரித்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (20) இராஜகிரிய பண்டாரநாயக்கபுரவில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேகநபரின் வீட்டில் 200 ஆண்டுகளுக்கும் மேலான பித்தளை சுவர் அலங்காரங்கள், கமரா உபகரணங்கள் மற்றும் கமரா பை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மற்றுமொரு குழுவினருடன் அலரி மாளிகைக்குள் பிரவேசித்து ஊடகப்பிரிவின் சொத்துக்கள் மற்றும் அலரி மாளிகையிம் சுவர் அலங்காரப் பொருட்களை திருடியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.(யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.