பொலிஸ் வாகனத்தில் தங்க நகைகளை கொள்ளையடித்த 28 வயது யுவதி கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் வாகனத்தில் தங்க நகைகளை கொள்ளையடித்த 28 வயது யுவதி கைது!


கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது மருதானை, பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் பதிவாகிய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இரண்டு பொலிஸ் வாகனங்கள் மீது தாக்குதல் மற்றும் தீ வைத்தமை மற்றும் வாகனங்களில் பயணித்த டி.ஐ.ஜி மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இரண்டு பொலிஸ் வாகனங்களில் இருந்த தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


திருடப்பட்ட தங்க நகைகளை வைத்திருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் விளைவாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த பெண் மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.