காதல் விவகாரம்; 26 வயது பெண் குத்திக் கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காதல் விவகாரம்; 26 வயது பெண் குத்திக் கொலை!


இன்று (03) காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகியுள்ள இருவேறு சம்பவங்களில் இரு நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

கடுகன்னாவ, ரத்மிவல பிரதேசத்தில் நேற்று பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் ரத்மிவல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குறித்த பெண்ணுடன் காதல் உறவில் ஈடுபட்ட ஆண் ஒருவரே அவரை கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் கடுகன்னாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குளியாப்பிட்டிய, பிடதெனிய பிரதேசத்தில் நேற்று இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பிடதெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பாதிக்கப்பட்ட நபர் தனது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதாகவும், அதன் போது நண்பரின் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அதன்பிறகு, நண்பரும் அவரது கூட்டாளிகளும் பாதிக்கப்பட்டவரை மரக் கம்புகள் மற்றும் கத்தியால் தாக்கி, வீட்டிற்கு வெளியே உள்ள விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்தனர். 

பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

மூவரில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றைய இரு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.