VIDEO: பிரதமர் ரணில் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: பிரதமர் ரணில் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று பாராளுமன்றத்தில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு புத்துயிர் பெறுவது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தனது சொந்த கூற்றுகளுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகாரத்தைக் கைப்பற்ற போராடும் எதிர்க்கட்சிகளைப் பார்ப்பது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த அவர், ஒரு நாட்டை எவ்வாறு ஆட்சி செய்வார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

பிரதமருக்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க ஒரு திறமையற்ற பிரதமர் என்பது இலங்கைக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் தெரியும்.

எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை பிரதமருக்கு கற்றுக்கொடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.