VIDEO: பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!

கொழும்பு 07, ஃப்லவர் வீதியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலக வளாகத்திற்குள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இன்று பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியிருந்தனர்.

போராட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போதிலும், பிரதமருக்கு எதிராக தங்கள் அதிருப்தியை தெரிவிக்க ஏராளமான போராட்டக்காரர்கள் கூடினர்.

பல போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தின் பின்புற வாசல் வழியாகவும் பக்கவாட்டு சுவர்கள் வழியாகவும் நுழைந்தனர்.

பிரதமர் அலுவலகம் முன்பு நடைபெற்று வரும் போராட்டத்தில் 24 போராட்டக்காரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.