QR முறைக்கு எ‌ரிபொரு‌ள் வழங்க எம்மிடம் போன்கள் இல்லை! போன்கள் பெற்றுத் தருமாறு கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

QR முறைக்கு எ‌ரிபொரு‌ள் வழங்க எம்மிடம் போன்கள் இல்லை! போன்கள் பெற்றுத் தருமாறு கோரிக்கை!


எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் முன்வைத்துள்ள மென்பொருளின் ஊடாக எரிபொருளை விநியோகிப்பது மிகவும் கடினம் என நாடு முழுவதிலும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் தெரிவித்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு தேவையான கையடக்கத் தொலைபேசிகள் தங்களிடம் இல்லை என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ கூறுகிறார். 

தேவையான வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் தற்போது சந்தையில் கிடைப்பதில்லை எனவும், கொழும்பு நகரிலும் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்த அவர், புறநகர் பகுதிகளில் இவற்றை காணக்கூட முடியாது எனவும் தெரிவித்தார். 

எனவே அந்த வசதிகளுடன் கூடிய கையடக்க தொலைபேசிகளை வழங்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.