advertise here on top
Join YazhNews WhatsApp Community

QR குறியீட்டு முறைப்படி எரிபொருள் வழங்கும் திகதியில் மாற்றம்!!


புதிய QR குறியீட்டு முறைப்படி, வரும் 25ம் திகதி முதல் பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்கும் பணியை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த முறைப்படி எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த முறை ஜூலை 25ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (19) பிற்பகல் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆனால் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கொழும்பில் பல இடங்களில் சோதனை அடிப்படையில் QR குறியீட்டின் பிரகாரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வாகனப் பதிவு எண்ணின் கடைசி எண் (வாகன எண்ணின் கடைசி இலக்கம்) 0, 1, 2 ஆக இருந்தால் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் எரிபொருளைப் பெறலாம்.

வாகனப் பதிவு எண்ணின் கடைசி எண் 3, 4, 5 ஆக இருந்தால், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் பெறலாம்.

வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கம் 6, 7, 8, 9 என இருந்தால் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் எரிபொருளைப் பெறலாம்.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் கீழ் எரிபொருள் விடுவிப்பது சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.