BREAKING: வெற்றிடமாக இருக்கும் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: வெற்றிடமாக இருக்கும் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

நாடாளுமன்றம் அடுத்த வாரம் வெற்றிடமாகியுள்ள நிரைவேற்று ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதாகவும் அவர் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மூன்று தசாப்தங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த நாட்டு மக்களுக்காக எப்போதும் நான் நிற்பேன் என்பதும் இரகசியமல்ல எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களிடையே நல்லிணக்கத்தையும் பாதுகாத்து, இந்த தாய்நாட்டை பொருளாதார சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு செய்யக்கூடிய மற்றும் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் தியாகங்களுக்கு என்னை ஒருமனதாக அர்ப்பணிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.