அதிகரிக்கப்போகும் எரிவாயு விலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகரிக்கப்போகும் எரிவாயு விலை!

எரிவாயு சிலிண்டரின் ஒன்றின் விலையை எதிர்வரும் காலத்தில் 50 ரூபாயால் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.  

எரிவாயு சிலிண்டரின் விலையை 200 ரூபாயால் அதிகரிக்க வேண்டும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

எனினும், நாட்டு மக்களின் தற்போதைய அவல நிலையைக் கருத்தில் கொண்டு சிலிண்டர் ஒன்றின் விலையை 50 ரூபாயால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 3,700 மெற்றிக் தொன் எரிவாயு தொகுதியை ஏற்றிய கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்தை இன்று (10) வந்தடைந்தது.

அதற்கமைய நாளை (11) முதல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கவுள்ளதாகவும்  எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட 140 இடங்களில் 140,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, 3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை (11) இலங்கையை வந்தடையும் என, லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.