பிரதமருடனான கூட்டத்தில் பங்கேற்காத ஐக்கிய மக்கள் சக்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமருடனான கூட்டத்தில் பங்கேற்காத ஐக்கிய மக்கள் சக்தி!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சமகி ஜன பலவேகய பங்கேற்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் தெளிவாகக் கூறுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச அறிக்கையொன்றை வெளியிட்டார்.

பொதுமக்களின் எதிர்ப்புக்களால் வளைக்கப்பட்டிருந்த ராஜபக்சக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்து மீண்டும் அரசியல் களத்தில் பிரவேசிக்க வழிவகுத்துள்ளதாக அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களுடன் நிற்பதாகவும், வெற்றி அடையும் வரை மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் என்றும் கூறிய அவர், அரசுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்றும் கூறினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.