வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு விசேட ஓய்வூதியத் திட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு விசேட ஓய்வூதியத் திட்டம்!


புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட ஓய்வூதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இன்னும் சில வாரங்களில் ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய முறையை தயாரிப்பது தொடர்பில் பல வருடங்களாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் அனுசரணையுடன் ஓய்வூதிய முறையை உடனடியாக அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்லும் பணியாளர்களுக்கு இந்த ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாட்டு நாணய அலகுகளில் பிரீமியத்தை செலுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், பணத்தை செலுத்தும் போது எந்தவொரு தொழிலாளி இறந்தாலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பிரீமியத்தை செலுத்தி சட்ட உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.