புதிய அரசாங்கம் …. பிரதமர் சஜித் …. பல அரசியல் கட்சிகள் இணக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய அரசாங்கம் …. பிரதமர் சஜித் …. பல அரசியல் கட்சிகள் இணக்கம்!

பல அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் என்ற வகையில் மேலும் பல கட்சிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் திரு சஜித் பிரேமதாச அரசாங்கத்தை அமைக்கும் நிலையில் இருப்பதாக திரு அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான நிபந்தனையாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதற்கான காலக்கெடுவை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர்கள் முன்வைக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்தினால் முடியவில்லை எனவும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு மக்கள் கோருவதாகவும் பிரதமர் ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.