எ‌ரிபொரு‌ள் பாஸ் இணை பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எ‌ரிபொரு‌ள் பாஸ் இணை பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்!!

வாகன ஓட்டுநர்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் 'தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு' (பாஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இவ்விடயத்தை அறிவித்தார்.

http://fuelpass.gov.lk/ என்ற இணையத்தில் தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்யுமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட அமைச்சர், திட்டம் எப்போது செயற்படுத்தப்படும் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

ஒரு தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ்  ஒரு வாகனத்தை பதிவு செய்ய முடியும், வாகனத்தின் சேஸ் எண் உட்பட ஏனைய விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

QR குறியீட்டைப் பயன்படுத்தி வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் 2 நாட்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்றார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகியவற்றின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த சேவை மூலம் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விளம்பரங்களுக்கு WhatsApp மூலம் தொடர்பு கொள்ளவும். 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.