பஸ் கட்டணம் குறைக்கப்படலாம் - பேருந்து சங்கம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸ் கட்டணம் குறைக்கப்படலாம் - பேருந்து சங்கம்

இன்று (18) தனியார் பஸ்கள் சுமார் 15% வீதத்தில் இயங்குவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பினால் பஸ் கட்டணத்தில் குறைப்பு ஏற்படுமா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், போதியளவு டீசல் கிடைத்தால் பரிசீலிக்கலாம் என்றார்.

இது தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித்திடமும் வினவியபோது, ​​தேசிய பஸ் கட்டண கொள்கையின் பிரகாரம் டீசல் விலையில் 4% மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

அதன்படி, எரிபொருள் விலை 20 ரூபாவால் டீசல் குறைக்கப்பட்டதன் அடிப்படையில் 4% விலையில் திருத்தம் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் அமைச்சுடன் கலந்துரையாட வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.