எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்பதே தமது கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பேர் ஏற்கனவே இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே அரசாங்கத்தில் உள்ளவர்கள், அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டின் படி செயற்படுவார்கள்.
அதற்கமைவாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
இந்தத் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்பதே தமது கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பேர் ஏற்கனவே இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே அரசாங்கத்தில் உள்ளவர்கள், அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டின் படி செயற்படுவார்கள்.
அதற்கமைவாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)