சுதந்திர கட்சியில் பிளவு - ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்க தயார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுதந்திர கட்சியில் பிளவு - ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்க தயார்!

எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்பதே தமது கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பேர் ஏற்கனவே இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே அரசாங்கத்தில் உள்ளவர்கள், அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டின் படி செயற்படுவார்கள்.

அதற்கமைவாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.