ஜனாதிபதி தேர்தலுக்கு மூவர் தெரிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி தேர்தலுக்கு மூவர் தெரிவு!

வெற்றிடமாக இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவினை பரிந்துரை செய்துள்ளதோடு தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய அதனை ஆமோதித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவினை பரிந்துரை செய்துள்ளதோடு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜீ. எல். பீரிஸ் அதனை ஆமோதித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினை பரிந்துரை செய்துள்ளதோடு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானாயக்கார அதனை ஆமோதித்துள்ளார்.

இதனடிப்படையில் ரணில் விக்ரமசிங்க, அனுர குமார திசாநாயக்க மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளனர். நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.