பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் ரணில் ஜனாதிபதியாக கடமையாற்றுவார் - சபாநாயகர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் ரணில் ஜனாதிபதியாக கடமையாற்றுவார் - சபாநாயகர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான அரசியலமைப்பு நடைமுறைகள் தற்போது முதல் அமுல்படுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி பதவிக்கான அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் கடமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் படி பிரதமர் செயற்பட உள்ளார்.

இந்த ஜனநாயக செயற்பாட்டிற்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரது ஒத்துழைப்போடு 7 நாட்களுக்குள் இச்செயற்பாடு நிறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாகவும், அதன்படி நாளை (16) சனிக்கிழமை பாராளுமன்றம் கூடும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.