நாட்டுக்கு வரவிருக்கும் எ‌ரிபொரு‌ள் கப்பல்கள் தொடர்பான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டுக்கு வரவிருக்கும் எ‌ரிபொரு‌ள் கப்பல்கள் தொடர்பான அறிவித்தல்!


டீசல் கப்பல் ஒன்று எதிர்வரும் 15-17 ஆம் திகதி வருவதற்கும், பெற்றோல் கப்பல் 22-24ஆம் திகதிக்கு வருவதற்கும் ஐஓசி நிறுவனத்துக்கு பணம் செலுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜூலை 09ஆம் திகதி வர வேண்டிய இந்த கப்பல்கள், வானிலை சீர்கேடு காரணமாக தாமதமாகிவிட்டதாகவும், சரியான நேரத்தில் எரிபொருட்களை கப்பலில் ஏற்றிக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் எரிபொருட்களுடன் கப்பல் நேற்று காலை இந்தியாவிலிருந்து புறப்பட்டதை விநியோகஸ்தர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் உதவியுடன் டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்களுக்கான முழு கொடுப்பனவுகளும் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.