இன்று மாலை 04 மணிக்கு விசேட கட்சித் தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த சபாநாயகர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று மாலை 04 மணிக்கு விசேட கட்சித் தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த சபாநாயகர்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று மாலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 04.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக அவசர கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பிரதமர் கோரிக்கை விடுத்திருந்தார்.

தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இன்று இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.