வேலைவாய்ப்புகளுக்காக தென்கொரியா செல்லவிருப்போர்களுக்கு அமைச்சரிடம் இருந்து பச்சைக் கொடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வேலைவாய்ப்புகளுக்காக தென்கொரியா செல்லவிருப்போர்களுக்கு அமைச்சரிடம் இருந்து பச்சைக் கொடி!

தென் கொரியாவில் வேலைவாய்ப்பிற்கு தகுதி பெற்ற 5,800 பேர் தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கொரிய மனிதவளத் திணைக்களத்தின் பணிப்பாளரும் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியுமான லீயுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது சாதகமான தீர்வை வழங்குவதற்கு கொரிய தூதுவர் இணங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், வேலை வாய்ப்புக்கு தகுதியான 5800 பேரும் கொரியாவிற்கு அழைத்து வரப்படுவார்கள் என உறுதியளித்தார்.

அதன்படி, அடுத்த வாரம் முதல் வாரத்திற்கு ஒரு விமானம் 200 இலங்கை பணியாளர்களை கொரியாவுக்கு ஏற்றிச் செல்லும், அதன் பிறகு வாரத்திற்கு இரண்டு விமானங்களாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.