கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதம் உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதம் உயர்வு!

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கு அறவிடப்படும் வட்டி விகிதங்களை அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. 

அதன்படி, பல வங்கிகள் கடன் அட்டைகளுக்கு 30% வட்டி விகிதத்தை அறிவித்துள்ளன. 

கடன் அட்டைகள் மீது விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வட்டி விகித வரம்புகளை நீக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை ஏப்ரல் 08ஆம் திகதி தீர்மானித்தது. 

அந்த முடிவைத் தொடர்ந்து, கடன் அட்டை வட்டி விகிதங்கள் 18% லிருந்து 24% ஆகவும், பின்னர் 30% ஆகவும் உயர்ந்துள்ளன.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் நாட்டில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,973,481 ஆக இருந்தது. ஏப்ரல் 2022 இறுதியில் இந்தக் கடன் அட்டைகளுக்கான மொத்தத் தொகை ரூ. 138,192 மில்லியன். 2022 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், நாட்டில் செயல்பாட்டில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 46,286 ஆல் அதிகரித்துள்ளது மற்றும் நிலுவையில் உள்ள கடன் அட்டைகளின் மொத்தத் தொகை ரூ. 4,907 மில்லியன் என பதிவாகியுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.