சஜித் கட்சியில் இருந்து வெளியாகினார் சம்பிக்க!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஜித் கட்சியில் இருந்து வெளியாகினார் சம்பிக்க!


ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (08) முதல் பாராளுமன்றத்தில் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். 

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, தனது தீர்மானத்தை 03 நாட்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக தெரிவித்தார். 

தற்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு கட்சிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், தற்போது சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதன் மூலம் அதிக ஆதரவை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்திடம் இருந்து அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்வதற்காக இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மறுத்துள்ளார். 

“அத்தகைய அறிக்கைகளை நான் கடுமையாக மறுக்கிறேன். அத்தகைய செய்திகளில் உண்மை இல்லை. இந்த அரசாங்கத்திடம் இருந்து எந்த ஒரு அமைச்சர் பதவியையும் ஏற்கும் எண்ணம் எனக்கு இல்லை,'' என்றார். 

அரசாங்கத்தில் மாற்றம் மற்றும் சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமையும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். தேசத்திற்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ துரோகம் செய்யும் வகையில் தாம் ஒருபோதும் செயற்படப்போவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க உறுதியளித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.