மீண்டும் இலங்கைக்கான விமான சேவையினை ஆரம்பிக்க இணக்கம் தெரிவித்த ஏரோஃப்லொட் ரஷ்ய விமான நிறுவனம் - நிபந்தனை இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் இலங்கைக்கான விமான சேவையினை ஆரம்பிக்க இணக்கம் தெரிவித்த ஏரோஃப்லொட் ரஷ்ய விமான நிறுவனம் - நிபந்தனை இது தான்!

ரஷ்யாவை தளமாகக் கொண்ட ஏரோஃப்ளோட் விமான நிறுவனம், தனது விமானங்கள் மீண்டும் தடுத்து வைக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் உறுதியளித்தால், இலங்கைக்கான விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜனிதா ஏ. லியனகே நேற்று ஊடகமொன்றுக்கு தொலைபேசியில் தெரிவித்ததாவது, இலங்கை தரப்பின் உத்தரவாதத்தின் பேரில் கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கு விமான அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


நீதிமன்ற உத்தரவின் பேரில், குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானம் கொழும்பில் தரையிறக்கப்பட்டதை அடுத்து, குறித்த விமான நிறுவனம் கொழும்புக்கான வணிக விமானங்களை நிறுத்தியது. பின்னர், இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் தலையிட்டு, தடை உத்தரவை நிறுத்தினார். 

நீதிமன்ற வழக்கு முழுமையாக முடியும் வரை விமான நிறுவனம் காத்திருக்கும் என இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

"விமான நிறுவன அதிகாரிகளை ஒத்துக்கொள்ள வைக்க நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது," என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.