எரிபொருள் பாவனையாளர்களுக்கு பதிவு செய்து கொள்ளும் முறைமை - ரேஷன் முறையில் எரிபொருள் விநியோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் பாவனையாளர்களுக்கு பதிவு செய்து கொள்ளும் முறைமை - ரேஷன் முறையில் எரிபொருள் விநியோகம்!

போக்குவரத்து மற்றும் கைத்தொழில் துறைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் எதிர்காலத்தில் ரேஷன் முறையொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அனைத்து எரிபொருள் பாவனையாளர்களும் தமது பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தனியார் பஸ்களுக்கான டீசல் விநியோகத்தை இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு எரிபொருள் களஞ்சியசாலைக்கும் தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.