சனத்திடம் மன்னிப்பு கோரிய தம்மிக்க பெரேரா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சனத்திடம் மன்னிப்பு கோரிய தம்மிக்க பெரேரா!


அரச பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தக தலைவருமான தம்மிக்க பெரேரா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது பெயரை தவறாக குறிப்பிட்டதற்காக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜயசூரியவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். 

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தம்மிக்க பெரேரா, கிரிக்கெட் ஜாம்பவான்களான சனத் ஜயசூரிய மற்றும் அரவிந்த டி சி ஆகியோரை சனத் குணதிலக மற்றும் அரவிந்த பெரேரா என்றும் குறிப்பிட்டார். 

குறித்த அந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. 

“என்னிடம் மன்னிப்பு கேட்க தம்மிக்க பெரேராவிடமிருந்து இப்போதுதான் அழைப்பு வந்தது. இது வெறும் நாக்கு சறுக்கல், மூளையின் தவறு அல்ல என்று சொன்னேன். முன்னோக்கிச் செல்லும் கடினமான பணிக்கு நான் அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். இந்த விடையம் இதனுடன் முடிந்தது என வைத்துக் கொள்வோம்” என்று சனத் ஜெயசூர்யா ட்வீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.