சமையல் எரிவாயு கையிருப்பு குறைவடைந்துள்ளதால் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக இன்று (04) மற்றும் நாளை (05) வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாளை (05) 2,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் வரும் கப்பல் வரவுள்ளதாகவும், அதன் பின்னர் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.
இதேவேளை, 3500 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் வரும் கப்பல் ஒன்று இன்று (04) கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு சமீபத்தில் சமையல் எரிவாயு உள்நாட்டு எரிவாயுவை மறுவிநியோகிக்கும் திட்டத்தை அறிவித்தது. (யாழ் நியூஸ்)