இரண்டு வாரங்களாக எ‌ரிபொரு‌ள் வரிசையில்..

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரண்டு வாரங்களாக எ‌ரிபொரு‌ள் வரிசையில்..


நோர்வூட் பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாமல் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஹட்டன் நோர்வூட் பிரதேச வாசிகள் நோர்வூட் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய் கொள்வனவு செய்து வந்தனர். 

மண்ணெண்ணெய் வாங்குவதற்காக காலையில் பல நாட்களாக வரிசையில் காத்திருந்த தோட்டத் தொழிலாளர்களும் பிரதேச மக்களும், பின்னர் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து வெறுங்கையுடன் வீடு திரும்பினர். 

சுமார் 14 நாட்களாக நோர்வூட் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த மக்கள் தமக்கு மண்ணெண்ணெய் கையிருப்பு கிடைக்கவில்லை எனவும் தற்போது மண்ணெண்ணெய் விலை அதிகரித்தால் தாங்கள் மேலும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.