எரிபொருள் வரிசையில் இருப்போரை பொலிசார் அடித்து விரட்டும் காணொளி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் வரிசையில் இருப்போரை பொலிசார் அடித்து விரட்டும் காணொளி!


எரிபொருள் வரிசையில் நின்றவர்களை பொலிசார் அடித்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பேருவளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருக்கின்றனர். 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களில் இருந்து அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விடுவிக்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. 

அந்த முடிவு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அமலில் இருக்கும். ஆனால் லங்கா ஐஓசி  நிறுவனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்த அளவு எரிபொருளை விநியோகித்து வருகிறது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.