பாலர் பாடசாலை குழந்தை ஒன்றை கடத்த முயன்ற வாயோதிபர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாலர் பாடசாலை குழந்தை ஒன்றை கடத்த முயன்ற வாயோதிபர்!


குழந்தை ஒன்றைக்கடத்த முற்பட்ட வயோதிபர் ஒருவர் சம்மாந்துறையில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளது. 

இது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

04 வயதையுடைய ஆண் குழந்தையொன்று சம்மாந்துறை ஹிஜ்ரா 05ஆம் வீதியில் இயங்கும் பாலர் பாடசாலையிலிருந்து நண்பகல் ஒரு மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவ்வீதியில் நின்றிருந்த 55 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் இக்குழந்தையை வாகனம் ஒன்றில்  கடத்த முற்பட்டுள்ளார்; இதன்போது அக்குழந்தை கூக்குரலிட்டு அழுதுள்ளது.

இதனை அவதானித்த அவ்வீதியில் நின்றிருந்த பொதுமக்கள் அக்குழந்தையை அவ்வயோதிபரிடமிருந்து காப்பாற்றியதோடு அவ்வயோதிபரை நையப்புடைத்து சம்மாந்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கைது  செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை  மருந்துகள், சிறிஞ், ஊசி மற்றும் பாடசாலை மாணவர்களில் உடைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.