அமைச்சர் நசீர் அஹ்மட் மற்றும் எரிசக்தி அமைச்சர் எரிபொருள் மற்றும் எரிவாயு கடனுதவிக்காக கட்டார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சர் நசீர் அஹ்மட் மற்றும் எரிசக்தி அமைச்சர் எரிபொருள் மற்றும் எரிவாயு கடனுதவிக்காக கட்டார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!!!

இலங்கையின் எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டாரின் எரிசக்தி துறையின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

எரிசக்தி விவகார இராஜாங்க அமைச்சரும் கட்டார் எரிசக்தியின் ஜனாதிபதியும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சாட் ஷெரிடா அல்-காபியை இன்று சந்தித்ததாக அமைச்சர் காஞ்சன தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு பெட்ரோலிய பொருட்கள், திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயு (LPG), மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

கட்டார் எரிசக்தி மற்றும் கட்டார் அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் இலங்கையின் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் கூறினார்.

“கத்தார் வளர்ச்சிக்கான நிதியத்தின் துணை இயக்குநர் ஜெனரலைச் சந்தித்தேன். பெட்ரோலியம் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான சாத்தியமான கடன் இணைப்பு வசதி பற்றி கலந்துரையாடப்பட்டது. மருத்துவப் பொருட்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடன் வசதிக்கான கோரிக்கையை பரிசீலித்து IMF திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது” என்று அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் உடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அதிகாலை கட்டார் நோக்கிச் சென்றார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.