கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பம் செய்யாதீர் - எச்சரிக்கை விடுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பம் செய்யாதீர் - எச்சரிக்கை விடுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம்

இந்த காலப்பகுதியில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் அவசர தேவையிருந்தால் அன்றி அதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவின் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பிரியந்த ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் இதுவரையில் சுமார் 350,000 வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 60,000 பேர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவசரத் தேவை இல்லாவிட்டால் விண்ணப்பிப்பதைத் தாமதப்படுத்துமாறு திணைக்களம் பொதுமக்களை எச்சரிக்கிறது.

ஒரு நாள் சேவையின் கீழ் 1000 கடவுச்சீட்டுகளை மாத்திரமே வழங்க முடியும் எனினும் அது 3000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மேலும் அதிகரிக்க முடியாது எனவும் ஹப்புஆராச்சி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.