இலங்கையில் தரையிறங்கிய ரஷ்ய விமானத்துக்கு மீண்டும் ரஷ்யா செல்ல தடை விதித்த நீதிமன்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் தரையிறங்கிய ரஷ்ய விமானத்துக்கு மீண்டும் ரஷ்யா செல்ல தடை விதித்த நீதிமன்றம்!

நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மொஸ்கோ நோக்கிச் செல்லும் ரஷ்ய அரசுக்கு சொந்தமான ஏரோஃப்ளோட் விமானம் ஒன்றுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

எனினும், விமானத்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனத்துடன் ஏற்பட்ட வர்த்தக தகராறு காரணமாக விமானம் புறப்பட அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த விடயம் தொடர்பான தீர்வுக்காக சட்டமா அதிபருடன் (AG) கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அயர்லாந்து நிறுவனமான செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் லிமிடெட் தாக்கல் செய்த முறைப்பாட்டினை விசாரித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதியினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.