எஞ்சிய இரண்டு ஆண்டுகளை எனது பதவிக்காலத்தில் முடிப்பேன்! -ஜனாதிபதி

advertise here on top
Join yazhnews Whatsapp Community

எஞ்சிய இரண்டு ஆண்டுகளை எனது பதவிக்காலத்தில் முடிப்பேன்! -ஜனாதிபதி

தன்னை பதவி நீக்கம் செய்யக் கோரி பல மாதங்களாக போராட்டங்கள் நடத்திய போதிலும், எஞ்சிய இரண்டு ஆண்டுகளை தனது பதவிக்காலத்தில் முடிப்பேன் என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கலை, மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சரிசெய்வதில் கவனம் செலுத்துவதால் மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

"தோல்வியுற்ற ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது" என்று அவர் இன்று (06) கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒரு நேர்காணலில் கூறினார்.

"எனக்கு ஐந்து வருடங்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை மீண்டும் போட்டியிட மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.