90 மில்லியன் டொலர்கள் பெருமதியான எரிவாயு வெற்றிகரமாக கொள்முதல் செய்யப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

90 மில்லியன் டொலர்கள் பெருமதியான எரிவாயு வெற்றிகரமாக கொள்முதல் செய்யப்பட்டது!


Litro Gas இன் தலைவர் முதித பீரிஸ் உலக வங்கியுடன் இலங்கைக்கு நான்கு மாதங்களுக்கு தொடர்ந்து சமையல் எரிவாயு எரிவாயு வழங்கும்  ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

அதன்படி, லிட்ரோ கேஸ் நிறுவனமானது, 90 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான 100,000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை வெற்றிகரமாக கொள்முதல் செய்துள்ளது.

இதற்காக உலக வங்கி 70 மில்லியன் டொலர்கள் நிதியுதவி அளித்துள்ளது, மீதமுள்ள 20 மில்லியன் டொலர்களை லிட்ரோ நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சரக்கு நான்கு மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என அறியப்படுகிறது.

மேலும், இதில் 70% சரக்கு உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும். இதன் மூலம் 5 மில்லியன் 12.5 கிலோ சிலிண்டர்கள், 1 மில்லியன் 5 கிலோ சிலிண்டர்கள் மற்றும் 1 மில்லியன் 2.5 கிலோ சிலிண்டர்கள் பெறப்படும். மீதமுள்ள 30% வணிக பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.