advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் 40% வீதத்தினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் - பிரதமர்!

எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெறுவதில் சிரமமான காலகட்டமாக இருக்கும் எனவும் இதன் காரணமாக தம்மைப் பற்றி மாத்திரம் சிந்திக்க வேண்டாம் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த பிரதமர், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு மக்கள் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டிற்கு மாதாந்தம் எரிபொருளுக்காக 550 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிபொருளுக்காக 3300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டின் மாதாந்த எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மாதாந்தம் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிவாயு வழங்க 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகளாவிய தேவையை எதிர்கொண்டு இந்த வருட இறுதிக்குள் எரிபொருட்களின் விலைகள் சுமார் 40 வீதத்தால் அதிகரிக்கும் என ஊகங்கள் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.