எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு நேரங்கள் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு நேரங்கள் இது தான்!

நாளை மே 6 ஆம் திகதி முதல் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை அமுலில் இருக்கும் மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

அடுத்த மூன்று நாட்களில் 03 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பகுதிகளில் மின்வெட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் அமுல்படுத்தப்படும்.

மேலே குறிப்பிட்ட அதே பகுதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படும்.

எவ்வாறாயினும், மேற்கூறிய மூன்று நாட்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணிநேரம் CC பகுதியில் மின்வெட்டு ஏற்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்தது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.