இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்த உலக வங்கி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்த உலக வங்கி!

போதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிய நிதி வசதிகளை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மக்கள் தொடர்பில் உலக வங்கி கரிசனை கொண்டுள்ளதாகவும், இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்பதற்கு பொருத்தமான கொள்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சில நிதித் திட்டங்களை மீளாய்வு செய்துள்ளதாகவும், இலங்கைக்கு மருந்துகள், ஏழை விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நிதியுதவி வழங்குமாறும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.