வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட நாமல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட நாமல்!


மே 09ஆம் திகதி வன்முறைகளை மஹிந்த ராஜபக்சவே தூண்டிவிட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாம் திகதி அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்ச ஏற்பாடு செய்த பேரணியில் வன்முறை தூண்டப்பட்டது என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள முஜிபூர் ரஹ்மான் அந்த பேரணியில் கலந்துகொண்ட குண்டர்கள் நாமல் ராஜபக்சவுடன் செல்பி எடுத்துக்கொண்டனர், மேலும் காலிமுகத்திடலிற்கு செல்லும் பேரணிக்கு அவரை தலைமை தாங்குமாறு கேட்டுக்கொண்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரை படையினரை பயன்படுத்தி நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சரும் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அவ்வாறான வன்முறைகள் இடம்பெறுவதற்கு ஜனாதிபதியும் இடமளித்தாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரம் இருந்தபோதிலும் அவர்கள் வீடுகளை பாதுகாக்க தவறினார்கள் மெதமுலானவில் ஜனாதிபதியின் மூதாதையர் இல்லத்தை கூட காப்பாற்றமுடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.