விரைவில் தடையில்லா மின்சாரம்; திட்டத்தை வெளியிட்ட அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விரைவில் தடையில்லா மின்சாரம்; திட்டத்தை வெளியிட்ட அமைச்சர்!


நாட்டில் தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் மின்சார உற்பத்திக்கான எரிபொருளை முன்னுரிமையாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நொரச்சோலை மின்னுற்பத்தி நிலையம் திருத்தப் பணிகளின் பின்னர் நாளைய தினம் முழுமையாக இயங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நீர் மின் உற்பத்தியுடன் அடுத்த வார தொடக்கத்தில் நாடு முழுவதும் தடையில்லா மின்சாரத்தை வழங்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் மின்சார நெருக்கடிக்கு முன்னுரிமை அடிப்படையில் முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது ஆனால் எரிபொருள் நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வு இல்லை என்றார். 

அதேநேரம் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.